ஓடும் பஸ்ஸில் பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு

குமரி மாவட்டம் தக்கலை அருகே ஓடும் பஸ்ஸில் பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்  

Update: 2024-01-19 15:43 GMT
பைல் படம்
குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள கொல்லன்விளை, பார்த்தசாரதி கோவில் பகுதியை சேர்ந்தார் முருகன் மனைவி வசந்தா (57). நேற்று மருந்து வாங்குவதற்காக நாகர்கோவிலுக்கு சென்றார். மருந்து வாங்கி விட்டு நாகர்கோவில்  அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து  பெருஞ்சிலம்பு பகுதிக்கு செல்லக்கூடிய அரசு பேருந்தில் ஏறி பயணம் செய்தார்.     பின்னர் கொல்லன் விளை பகுதியில் இறங்கிய போது வசந்தா அணிந்திருந்த ஐந்து அரை பவுன் தாலி செயின் மாயமாகி இருந்தது. உடனடியாக பஸ்சை நிறுத்தி அருகில் இருந்தவரிடம் விசாரித்தும்  செயின் கிடைக்கவில்லை.       உடனடியாக இது குறித்து தக்கலை போலீசில் வசந்தா புகார் கொடுத்தார்.  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பஸ்சில் பயண நேரத்தில்  தாலிச் செயினை மர்ம நபர்கள் திருடி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News