முதல்வர்,இபிஎஸ்,ஆளுநர் உள்ளிட்டோருக்கு நன்றி: தமிமுன் அன்சாரி

12 சிறைவாசிகளை விடுவிக்க காரணமான முதல்வர்,இபிஎஸ்,ஆளுநர் உள்ளிட்டோருக்கு நன்றி என தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

Update: 2024-02-11 15:17 GMT

செய்தியாளர்களை சந்தித்த தமிமுன் அன்சாரி 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் திருமண வரவேற்பில் பங்கேற்க வந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார்.

தமிழக சிறையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளவர்களை மத,பேதமின்றி விடுவிக்க வேண்டும். முதற்கட்டமாக 12 பேரை விடுவிக்க காரணமான முதல்வர், எடப்பாடி பழனிசாமி,ஆளுநர் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் ஏழ்வரை விடுதலைக்காக போராடி,

உச்சநீதிமன்றம் அவர்களை விடுவித்தபோதும் ராபர்ட் பயாஸ், சாந்தன்,ஜெயக்குமார் ஆகிய மூவரை முகாமில் வைத்திருப்பதும் அதுவும் சிறைதான் என்பதால் ராபர்ட் பயாசை வெளிநாட்டிற்கும், சாந்தனை இலங்கைக்கும், ஜெயக்குமார் அவர்களை சென்னையில் உள்ள குடும்பத்தினருடன் சேர்த்து வைத்திட முதல்வரை கேட்டுக்கொள்கிறேன் நாடாளுமன்ற தேர்தலை பொருத்தவரை,

தேர்தல் தேதி அறிவிப்பிற்கு பிறகே கூட்டணி குறித்து கட்சியினர் கூடி முடிவெடுப்போம் என தெரிவித்தார்

Tags:    

Similar News