நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து சென்ற குற்றவாளிகள் தப்பியோட்டம்
கோவில் உண்டியல் திருட்டு வழக்கில் கோபிசெட்டிபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வரப்பட்ட இரண்டு குற்றவாளிகள் தப்பியோடினர். போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.
Update: 2024-01-07 07:33 GMT
கடத்தூர் அடுத்த சிங்கிரிபாளையம் பகுதியில் கடந்த வாரம் கோயிலில் உண்டியல் உடைத்து பணத்தை திருடிய வழக்கில் திருப்பூரைச் சேர்ந்த அஜித் மற்றும் சேது ஆகியோரை சிறுவலூர் காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை கோபிசெட்டிபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த கொண்டு செல்லும் போது குற்றவாளிகளான அஜித் , சேது இருவரும் காவல்துறையினரை ஏமாற்றி இருவரும் தப்பி சென்றனர். தப்பி சென்ற குற்றவாளிகள் இருவரையும் சிறுவலூர் மற்றும் கோபிச்செட்டிப்பாளையம் காவல்துறையினர் தேடி வருகின்றனர்