வீட்டு முன் நின்ற ஆட்டோ பைக் தீ வைத்து எரிப்பு  

ஆரல்வாய்மொழியில் வீட்டு முன் நின்ற ஆட்டோ பைக் தீ வைத்து எரிப்பு  

Update: 2024-01-30 11:46 GMT
தீப்பிடித்து எரியும் ஆட்டோ, பைக்
குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே உள்ள தோவாளை புதூர் பகுதியை சேர்ந்தவர் ராஜ். இவரது மகன்கள் செந்தில், அருள். இதில் செந்தில் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று இரவு சவாரி முடிந்து தனது வீட்டில் அருகில் ஆட்டோவை நிறுத்தி இருந்தார். இதன் அருகே அருளுக்கு சொந்தமான பைக்கும் நின்றது. இன்று அதிகாலை 3 மணியளவில் ஆட்டோ மற்றும்  பைக்கை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தனர். திடீரென சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தபோது பைக் ஆட்டோ தீயில் எரிந்து கொண்டிருந்தது. இது குறித்து உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அதற்குள் பைக் ஆட்டோ  முற்றிலும் எரிந்து  சேதம் அடைந்தது. இது குறித்து போலீசார்  சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில்  பதிவாகியுள்ள காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது.
Tags:    

Similar News