ரோபோ மூலம் நோட்டீஸ் வழங்கி பிரச்சாரம் செய்த பாஜகவினர்

திருப்பூரில் பாரத பிரதமர் மோடி கலந்து உள்ள உள்ள நிகழ்ச்சி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாஜகவினர் ரோபோ மூலம் நோட்டீஸ் வழங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-02-21 10:47 GMT
திருப்பூரில் பாரத பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ள நிகழ்ச்சி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாஜகவினர் ரோபோ மூலம் நோட்டீஸ் வழங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாதப்பூர் பகுதியில் வருகின்ற 27ஆம் தேதி நடைபெற உள்ள என் மண் என் மக்கள் நிறைவு மாநாட்டில் பாரத பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். இதற்கான பணிகள் பாஜக சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரக்கூடிய நிலையில் பாரதப் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ள நிகழ்ச்சி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விதங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று திருப்பூர் காமராஜர் சாலையில் உள்ள கலைஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலையத்தில் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக ரோபோ மூலம் பொதுமக்களுக்கு நோட்டீஸ் வழங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். ரோபோவின் கையில் தாமரைப்பூ , மாநாடு குறித்து விளம்பர நோட்டீஸ், சாக்லேட் ஆகியவை வைத்தவாறு பேருந்து நிலையத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கொண்டு சென்று வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் , மாவட்ட தலைவர் செந்தில்வேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டு நோட்டீஸ் வழங்கும் பணியை துவக்கி வைத்தனர். ரோபோ நோட்டீஸ் வழங்கியதை சிறுமியர் மட்டுமல்லாது கல்லூரி மாணவியர்களும் உற்சாகத்துடன் கண்டுக்களித்தனர்.
Tags:    

Similar News