எடப்பாடி அருகே சிறுமியை கடத்திய சிறுவன் கைது !

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே சிறுமியை கடத்திய சிறுவன் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தார்.

Update: 2024-03-26 12:18 GMT

 சிறுவன் கைது

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் சிறுமி கடைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை இதனால் குடும்பத்தினர் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது சிறுமி ஊருக்கு அருகில் உள்ள ஒரு வீட்டில் மயங்கி கிடந்தார். சிறுமியிடம் விசாரித்த போது அதே பகுதியைச் சேர்ந்த 18 வயது சிறுவன் முகத்தை துணியால் முடியும் வாயைப் பொத்தியதால் மயங்கியதும், அக்கம் பக்கத்தினர் கதவை தட்டியதால் சிறுமியை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு சிறுவன் சென்று விட்டதும் தெரிய வந்தது. இது குறித்து சிறுமியின் தாயார் சங்ககிரி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பு சுமித்ரா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறுவனை கைது செய்தார்.
Tags:    

Similar News