நடனமாடி வாக்கு சேகரித்த வேட்பாளர் !

திண்டுக்கல் கோவிந்தாபுரம் பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் திலகபாமா பறை இசைத்தும், நடனமாடியும் வாக்கு சேகரித்தார்.;

Update: 2024-04-09 11:27 GMT

பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் திலகபாமா

திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா கூட்டணி சார்பில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் திலகபாமா இன்று திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட மேற்கு ரத வீதி, காந்தி மார்க்கெட், செல்லாண்டியம்மன் கோவில் தெரு, வாணி விலாஸ் இறக்கம், பிள்ளையார்பாளையம், ராமநாதபுரம், கோவிந்தாபுரம், ஆர்த்தி தியேட்டர் சாலை, ஓய் எம் ஆர் பட்டி, நாகல் நகர், அனுமந்த நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Advertisement

அவருடன் பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர். திண்டுக்கல் கோவிந்தாபுரம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த திலகபாமா திடீரென பிரச்சார வாகனத்தை விட்டு கீழே இறங்கி பிரச்சார வாகனத்திற்கு முன்பு பறை இசைத்துக்கொண்டிருந்த தப்பாட்ட கலைஞர்களுடன் சேர்ந்து தானும் பறை இசைத்தும், நடனம் ஆடியபடி வாக்குகளை சேகரித்தார் . இந்த நிகழ்வு பிரச்சார களத்தில் சிறிது நேரம் கலகலப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News