திரவுபதி அம்மன் கோவில் தேர் திருவிழா !
திருக்கோவிலுார் அடுத்த பரனுார் சத்திரம் திரவுபதி அம்மன் கோவிலில் தேர் திருவிழா நடந்தது.;
By : King 24x7 Angel
Update: 2024-03-11 07:07 GMT
தேர் திருவிழா
திருக்கோவிலுார் அடுத்த பரனுார் சத்திரம் திரவுபதி அம்மன் கோவிலில் தேர் திருவிழா நடந்தது. இக்கோவிலில் பிரம்மோற்சவ விழா துவங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்ச்சியாக நேற்று தேர் மற்றும் தீமிதி விழா நடந்தது. அதனையொட்டி நேற்று முன்தினம் மாலை 4:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட அம்மன் தேரில் எழுந்தருளச் செய்து, பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். அதனைத் தொடர்ந்து, தீ மிதி விழா நடந்தது. பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.