திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்த முதல்வர்

குறிச்சி குளத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டந்த்தின் கீழ் எழுப்பப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை வீடியோ கான்பிரன்சிங் வாயிலாக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Update: 2024-01-05 09:21 GMT

கோவை: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவை-பொள்ளாச்சி சாலையில் உள்ள குறிச்சி குளத்தில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடைபெற்று வருகிறது.இதில் குறிச்சி பகுதியில் இருபது அடி உயரம் கொண்ட திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையில் உயிரெழுத்து,மெய்யெழுத்து,உயிர் மெய் எழுத்து,ஆயுத எழுத்து உள்ளிட்ட 247 தமிழ் எழுத்துக்களை கொண்டு செய்யப்பட்டுள்ளது.

மேலும் சில சொற்களும் இதில் இடம் பெற்றுள்ளது.இரண்டரை டன் எடையில் இருபது அடி உயரத்திற்கு இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் கவனத்தை ஈர்க்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ள இந்த  திருவள்ளுவர் சிலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோர் திருவள்ளுவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

Tags:    

Similar News