விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கிய ஆட்சியர்

திருப்பூர் மாவட்டத்தில் பாம்பு கடித்து மற்றும் நீரில் மூழ்கி இறந்த குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து காசோலையை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் வழங்கினார்.

Update: 2024-07-02 07:18 GMT
திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ்  திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருப்பூர் மாவட்டத்தில் பாம்பு கடித்து இறந்த பூமிநாதன் மற்றும் நீரில் மூழ்கி இறந்த சுந்தரமூர்த்தி ஆகியோரின் வாரிசுதாரர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 1 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார். உடன் துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) குமாரராஜா இருந்தார்.
Tags:    

Similar News