ரூ 70 லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

மயிலாடுதுறை இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசு தினத்தன்று ரூ.70 லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது

Update: 2024-01-26 13:51 GMT


மயிலாடுதுறை இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசு தினத்தன்று ரூ.70 லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது


மயிலாடுதுறை இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தியாகிகள் கௌரவிக்கப்பட்டதுடன், பணிகளில் சிறப்பாக செயல்பட்ட நபர்களுக்கு நற்சான்றிதழ்களும் 50 பயனாளிகளுக்கு சுமார் 70 லட்ச ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு சார்பில் வழங்கினார். தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் இந்திய வரைபடம் வடிவில் மாணவ மாணவிகளின் நின்று நடனம் ஆடியது உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
Tags:    

Similar News