மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை
கடலூர் மாவட்டத்தில் உடல் உறுப்பு தானம் செய்தவரின் உடலுக்கு மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.;
Update: 2024-05-15 13:02 GMT
உடல் உறுப்பு தானம்
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் உடலுறுப்பு தானம் செய்த கடலூர் மாவட்டம், ஸ்ரீ முஷ்ணம் வட்டத்தைச் சேர்ந்த கருணாகரன் என்பவரின் உடலுக்கு மாவட்ட நிருவாகத்தின் சார்பில் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.இராஜராம், அரசு அலுவலர்கள், உடலுறுப்பு தானம் செய்தவர் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் உள்ளனர்.