கோவிலுக்கு சென்ற பெண்ணை கடித்துக் குதறிய நாய்!

குடியாத்தம் அருகே கோவிலுக்கு சென்ற பெண்ணை நாய் கடித்து குதறியதில் , காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Update: 2024-06-18 03:25 GMT

சிகிச்சை பெற்று வரும் கல்பனா 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கொண்டசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட குறிஞ்சி நகர் பகுதியைச் சேர்ந்த கல்பனா (வயது 48).அவர் நேற்று மாலை அதே பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளார். அப்பொழுது கோயில் வளாகத்தில் படுத்திருந்த நாய் ஒன்று திடீரென கல்பனாவை கடித்துள்ளது.இதில் அவர் அலறியடித்து கூச்சலிட்ட பிறகும் கை, கால் உள்ளிட்ட இடங்களில் நாய் கடித்துக் குதறியது. இவரின் அலரல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் நாயை துரத்தி விட்டனர். இதனையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் குடியாத்தம் தலைமை அரசு மருத்துவமனைக்கு கல்பனாவை அனுப்பி வைத்தனர்.மேலும் அங்கு கல்பனாவுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
Tags:    

Similar News