வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த சிறுவனை கடித்துக் குதறிய நாய்கள்  

தஞ்சாவூர், அதிராம்பட்டினம் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூன்று வயது சிறுவனை தெருநாய்கள் கடித்துக் குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2023-11-28 12:22 GMT
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாதிக்கப்பட்ட சிறுவன்
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தஞ்சாவூர், அதிராம்பட்டினம் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூன்று வயது சிறுவனை தெருநாய்கள் கடித்துக் குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே மழவேனிற்காடு கிராமத்தை சேர்ந்த ரிஸ்வான் அலி; கூலித்தொழிலாளி. இவரது மனைவி தஸ்லிமா. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், திங்கள்கிழமை இரண்டு குழந்தைகள் பள்ளிக்கு சென்ற நிலையில், ஆதிஸ் (3), என்ற சிறுவன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தான். தஸ்லிமா சமைத்துக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென தெருவில் சுற்றித்திரிந்த மூன்று நாய்கள் வீட்டுக்குள் நுழைந்து, தூங்கிக் கொண்டிருந்த ஆதிஸ் மீது பாய்ந்து தலைப்பகுதியில் கடித்துக் குதறின. சத்தம் கேட்டு ஓடி வந்த தஸ்லிமா கூச்சலிட்டார். சிறுவன் வலி தாங்க முடியாமல் அழுது துடித்தான். சத்தம் கேட்டதால் நாய்கள் ஓடின. பின், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளித்து, தலையில் தையல் போடப்பட்டது. தற்போது சிறுவன் வீட்டில் நலமுடன் உள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News