ஆட்டோ கவிழ்ந்து விபத்து : டிரைவர் பலி !
திருச்செந்தூா் அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
Update: 2024-03-02 12:05 GMT
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் அருகேயுள்ள சோனகன்விளை, வேத கோயில் தெருவைச் சோ்ந்தவா் சுந்தரம் (41). ஆட்டோ டிரைவர். இவருக்கு மனைவி, 2 பிள்ளைகள் உள்ளனா். கடந்த 28ஆம் தேதி இரவு ஆட்டோவில் சோனகன் விளையில் இருந்து ஆள்களை ஏற்றிக்கொண்டு வள்ளிவிளையில் இறக்கி விட்டு ஊருக்கு வந்து கொண்டிருந்தாா். வள்ளிவிளை விலக்கு அருகே வந்த போது ஆட்டோ நிலை தடுமாறி கவிழ்ந்ததில். இதில் பலத்த காயம் அடைந்த சுந்தரம் திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தாா். இதுகுறித்து திருச்செந்தூா் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.