சிறுமிக்கு பாலியல் தொல்லை - டிரைவரை துவைத்து எடுத்த மக்கள்

குளச்சல் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த டிரைவரை பொதுமக்கள் அடித்து உதைத்தனர்.

Update: 2024-06-25 14:45 GMT

கோப்பு படம்

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே சாஸ்தான்கரை பகுதியில் வசிப்பவர் முகமது சம்னாத் (35).  இவர் திங்கள்நகர் - வெள்ள மோடி தடத்தில் மினி பஸ் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளது.    

 இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது  உறவு பெண்ணின் 10 வயது மகளை பாலியல் வன்முறை செய்துள்ளார். இதனை அறிந்த சிறுமியின் பாட்டி குளச்சல் மகளிர் போலீஸ் நிலையத்தில்  புகார் செய்தார். மகளிர் போலீசார் முகமது சம்னாத் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.   இதற்கு இடையில் இந்த சம்பவம் அறிந்த குளச்சலில் உள்ள ஒரு இயக்கத்தை சேர்ந்த பிரமுகர்கள் மினி பஸ் ஓட்டி சென்ற முகமது சம்னாத்தை பஸ்ஸிலிருந்து இறக்கி அவரை இரும்பு கம்பியால் தாக்கி உள்ளார்.

இதுதொடர்பாக முகமது சம்னாத் குளச்சல் சட்ட ஒழுங்கு பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் இயக்க பிரமுகர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  படுகாயம் அடைந்த முகமது ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரி அனுமதி சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags:    

Similar News