நர்சிங் பணிக்கான தேர்வு வரும் 7ம் தேதி நடக்கிறது

யுபிஎஸ்சி மற்றும் இ எஸ் ஐ சி ஆர் செருப்பு இயக்கத்துறையில் காலியாக உள்ள நர்சிங் அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களுக்கு வரும் 7-ம் தேதி தேர்வு நடக்கவுள்ளது.

Update: 2024-07-04 17:29 GMT

நர்சிங் தேர்வு 

யு.பி.எஸ்.சி., இ.எஸ்.ஐ.சி. ஆட்சேர்ப்பு இயக்கம் துறையில் காலியாக உள்ள 1,930 நர்சிங் அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புதவற்கான விண்ணப்பங்கள் கடந்த மார்ச் 7-ந் தேதி முதல் பெறப்பட்டது. இதற்கான எழுத்து தேர்வு வருகிற 7-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இத்தேர்வு இந்தியா முழுவதும் முக்கிய நகரங்களில் நடக்கிறது. அதன்படி தமிழகத்தில் சென்னை, வேலூர், கோவை, சேலம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நடக்கிறது.

வேலூர் மாவட்டத்தில் ஈ.வெ.ரா. மகளிர் பள்ளி, வேலூர் அரசு முஸ்லிம் பள்ளி, ஊரீசு பள்ளி, தோட்டப்பாளையம் அரசு கோடையிடி குப்புசாமி பள்ளி, ஹோலிகிராஸ்பள்ளி, எத்திராஜ் பள்ளி, காட்பாடி டான்போஸ்கோ ஆகிய 7 மையங்களில் காலை, மாலை இரு பிரிவுகளாக நடைபெற உள்ளது. இதனை 2,039 பேர் எழுத உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News