வாசுதேவநல்லூரில் கிணற்றில் தத்தளித்த மாடு உயிருடன் மீட்பு

வாசுதேவநல்லூரில் கிணற்றில் தத்தளித்த மாட்டை உயிருடன் தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.

Update: 2024-06-23 09:09 GMT
உயிருடன் மீட்கப்பட்ட மாடு

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகிலுள்ள புதுக்குளம் கண்மாய் அருகே உள்ள கிணற்றில் விவசாயி மாடு மேய்த்துக் கொண்டிருந்த போது காளைமாடு எதிர்பாரவிதமாக கிணற்றில் தவறி விழுந்து தத்தளித்தது.

இதை கண்ட விவசாயி மற்றும் அப்பகுதி பொதுமக்கள் வாசுதேவநல்லூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் வாசுதேவநல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலர் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று கிணற்றில் இறங்கி காளை மாட்டை உயிருடன் லாவகமாக மீட்டு மாடு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். இதற்கண்டு அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்பு துறையினரை வெகுவாக பாராட்டினர்.

Tags:    

Similar News