கிணற்றில் விழுந்த பசுமாட்டை மீட்ட தீயணைப்பு துறையினர்!

தீயணைப்பு துறையினர், 95 அடி ஆழம் 25 அடி தண்ணீரில் உள்ள கிணற்றில் இறங்கி பசுமாட்டை உயிருடன் மீட்டனர்.

Update: 2024-07-04 11:33 GMT

கெங்கவல்லி

கெங்கவல்லி:சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அடுத்த காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய விவசாய தோட்டத்தில், நேற்று நள்ளிரவு 11 மணி அளவில் இவரது விவசாய தோட்டத்தில் இருந்த பசுமாடு ஒன்று தவறி கிணற்றில் விழுந்தது. உடனடியாக கெங்கவல்லி தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், 95 அடி ஆழம் 25 அடி தண்ணீரில் உள்ள கிணற்றில் இறங்கி பசுமாட்டை உயிருடன் மீட்டனர்.
Tags:    

Similar News