வனத்துக்குள் திருச்செங்கோடு முதற்கட்ட பணிகள் துவக்கம்
வனத்துக்குள் திருச்செங்கோடு திட்டத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-02 09:19 GMT
வனத்துக்குள் திருச்செங்கோடு முதற்கட்ட பணிகள் துவக்கம்
நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை சார்பாக வனத்துக்குள் திருச்செங்கோடு எனும் திட்டத்தின் கீழ் வாளரைகேட் முதல் நாமக்கல் ரோடு வரையிலான கிரிவல பாதையில் நம்ம திருச்சங்கோடு அறக்கட்டளை, வனத்துறை, மற்றும் நெடுஞ்சாலை துறை இணைந்து மரக்கன்றுகள் நடும் நிகழ்வு இன்று துவங்கப்பட்டது,இதில் முதல் கட்டமாக 200 மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டது
நிகழ்வை நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் திருமதி தமிழரசி அவர்கள் மரக்கன்றுகள் நட்டு வைத்து நிகழ்வை துவங்கி வைத்தார், இந்நிகழ்வில் நமம் திருச்செங்கோடு அறக்கட்டளை நிர்வாகிகள், வனத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு மரங்களை நட்டு வைத்தனர்.