உலக்கை அருவியில் குளிக்க சென்றவரை இழுத்து சென்ற வெள்ளம்

உலக்கை அருவியில் குளிக்க சென்று வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட ஓய்வு பெற்ற அரசு ஊழியரின் உடலை தேடும் பணி இரண்டாவது நாளாக தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.;

Update: 2024-05-19 04:18 GMT
அருவி காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட ரியாஸ் அலி

சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் ரியாஸ் அலி (66) தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடன் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சேர்ந்த ஒருவர் அங்கு பணியாற்றியுள்ளார். அவரது மகள் திருமணத்தில் கலந்து கொள்ள ரியாஸ் அலி மற்றும் அவருடன் பணியாற்றிய 5 பேர் நேற்று நாகர்கோவில் வந்துள்ளார். திருமணம் முடிந்த பின்னர் இவர்கள் ஐந்து பேரும் உலக்கை அருவிக்கு குளிக்க சென்றுள்ளனர். அப்போது மழை பெய்து கொண்டிருந்தது.

Advertisement

அருவியின் கீழ் பகுதியில் இவர்கள் குளித்துக்கொண்டிருந்த போது மாலை 5 மணி அளவில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு வந்தது.  அப்போது ரியாஸ் அலியை  வெள்ளம் அடித்துச் சென்றது. இது குறித்து பூதப்பாண்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவம் சென்று தேடியும் அவர் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை.       மேலும்  நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று இரவு 7:30 மணி வரை தேடும் பணியில் ஈடுபட்டனர். கடும்  இருளாக இருந்ததால் மேற்கொண்டு அவர்களால் தேட முடியவில்லை. இதையடுத்து இன்று தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News