கிரிக்கெட் போட்டியை துவக்கி வைத்த முன்னாள் அமைச்சர்

வெங்கடசமுத்திரம் அரசு பள்ளியில் திமுக சார்பில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியை கிரிக்கெட் விளையாடி முன்னாள் அமைச்சர் துவக்கி வைத்தார்.

Update: 2024-05-26 12:04 GMT
கிரிக்கெட் போட்டி

பாப்பிரெட்டிப்பட்டி வெங்கடசமுத்திரம் அரசு உயர் நிலைப் பள்ளியில் முத்தமிழறிஞர் கலைஞரின் 101 வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக சார்பில் நடத்தும் மாபெரும் கிரிக்கெட் திருவிழாவை தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் முனைவர் பி.பழனியப்பன் M.Sc, Phd, தலைமை தாங்கி கிரிக்கெட் விளையாடி போட்டியை துவங்கி வைத்தார். வெங்கடசமுத்திரம் ஒன்றிய குழு உறுப்பினர் தேன்மொழி ஜெயக்குமார் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.

பாப்பிரெட்டிப்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் C.முத்துக்குமார் முன்னிலை வகித்தார்.நிகழ்வில் மாநில வர்த்தகர் அணி துணை செயலாளர், அ.சத்தியமூர்த்தி பாப்பிரெட்டிப்பட்டி,மேற்கு ஒன்றிய செயலாளர் PS.சரவணன்,ஊராட்சி மன்ற தலைவர் மலர் ,மாறப்பன், VC.கௌதமன் மற்றும் விழா குழுவினர் J.சுரேஷ்,ஜி.ரமேஷ், ஜெகநாதன், ஞானசேகர்,ராஜாதுரை, ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

Tags:    

Similar News