கண்ணீர் அஞ்சலி பேனருடன் மனு அளிக்க வந்த சிறுமியின் தாய்
வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் அஞ்சலி பேனருடன் சிறுமியின் தாய் மனு அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Update: 2024-06-25 08:13 GMT
மனு அளிக்க வந்தவர்கள்
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு, பரதராமி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிறுமி ஒருவரின் கண்ணீர் அஞ்சலி பேனருடன் வருகை தந்தனர். அதில், மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய தங்களது 12 வயது மகளுக்கு பரதராமி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் உரிய சிகிச்சையளிக்காமல், அலட்சியமாக செயல்பட்டதாகவும், அதனால் தங்கள் மகள் உயிரிழந்ததாகவும் குறிப்பிட்டிருந்தனர். தொடர்ந்து, ஆட்சியரை சந்தித்த சிறுமியின் பெற்றோர், அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனு அளித்தார்.