ரமலான் தொழுகைக்கு வந்தவர்களிடம் கை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு

மயிலாடுதுறை அருகே ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிவாசலில் தொழுகைக்கு வந்த இஸ்லாமியர்களிடம் காங்கிரஸ் வேட்பாளர் தீவிர வாக்கு சேகரித்தார்.

Update: 2024-04-11 10:15 GMT

காங்கிரஸ் வேட்பாளர்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா வடகரை மற்றும் அரங்கக்குடியில் உள்ள முஹையித்தீன் ஆண்டவர், ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

அப்போது இந்தியா கூட்டணி சார்பில் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சுதா  சட்டமன்ற உறுப்பினர்கள் நிவேதாமுருகன், ராஜகுமார் மற்றும் ஆதரவாளர்களுடன் பள்ளிவாசல்களுக்கு வந்து ஊர் ஜமாத்தார்கள், நாட்டாமைகள், பஞ்சாயத்தார்கள் மற்றும் தொழுகைக்கு வந்த இஸ்லாமியர்களின் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து துண்டு பிரசுரங்களை வழங்கி ஆதரவைத் திரட்டினார்.

அதைத்தொடர்ந்து தொழுகைக்கு வந்திருந்த குழந்தையை தூக்கிவைத்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். தொடர்ந்து துண்டு பிரசுரங்களை வழங்கி ரமலான் வாழ்த்து தெரிவித்து கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

Tags:    

Similar News