வேப்பனப்பள்ளியில் தெரு நாய்கள் தொல்லை அதிகரிப்பு

நாச்சிகுப்பம் மற்றும் வேப்பனப்பள்ளியில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதால்,வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Update: 2024-06-29 08:46 GMT

சாலையில் திரியும் நாய்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி மற்றும் நாச்சிக்குப்பம் சுற்றுவட்டார பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிய பொதுமக்கள் அச்சம் அமைந்துள்ளனர். கூட்டம் கூட்டமாக தெருநாய்கள் சாலைகளில் குறுக்கே வருவதால் சாலைகளில் வரும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்கு ஏற்பட்டு வருகிறது.

மேலும் இரவு நேரங்களில் தனியாக செல்லும் வாகனங்களை துரத்தி செல்கின்ற விபத்து ஏற்படுத்தி வருகிறது. மேலும் தெருநாய்கள் கூட்டமாக இருப்பதால் பொதுமக்கள் அப்பகுதியில் கடந்து செல்லவும் அச்சப்பட்டு வருகின்றனர்.

உடனடியாக இந்த தெருநாய்களை கட்டுப்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் சமூக ஆர்வலர் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Tags:    

Similar News