கிணற்றுக்குள் இறங்கிய தொழிலாளி மேலே வர முடியாமல் தவிப்பு

தென்காசி மாவட்டம்,வாசுதேவநல்லூரில் கிணற்றுக்குள் இறங்கிய தொழிலாளி மேலே வர முடியாமல் தவித்தவரை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.

Update: 2024-04-07 10:18 GMT
வாசுதேவநல்லூரில் கிணற்றுக்குள் இறங்கிய தொழிலாளி மேலே வர முடியாமல் தவிப்பு

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் உள்ள தனியார் வேளாண் கல்லூரியில் உள்ள கிணற்றில் மின் மோட்டார் பழுதானதால் மின் மோட்டாரின் பழுதுகளை சரி செய்ய நேற்று மாலை கிணற்றுக்குள் இறங்கிய தொழிலாளி மேலே வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார். இதை கண்டா பகுதி பொதுமக்கள் வாசுதேவநல்லூர் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இது குறித்து தகவலறிந்த வாசுதேவநல்லூர் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தொழிலாளியை பாதுகாப்பாக வெளியே மீட்டனர். இதற்குண்டா பகுதி பொதுமக்கள் வாசுதேவநல்லூர் தீயணைப்புத்துறையினரை நிர்வாக பாராட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News