கிரிவல பாதை சுற்றி தடுப்புகளை அமைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு !

பழனி கிரிவல பாதையை சுற்றி பக்கவாட்டில் தடுப்புகளை அமைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Update: 2024-03-21 10:48 GMT

உயர்நீதிமன்றம் உத்தரவு

திண்டுக்கல் மாவட்டம் பழனி கிரிவல பாதையை சுற்றி பக்கவாட்டில் தடுப்புகளை அமைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. வணிக நோக்கிலான கடைகள் கிரிவல வீதியை ஆக்கிரமிக்காமல் இருக்க பக்கவாட்டு தடுப்புகளை அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கிரிவல பாதையில் கூடுதலாக மின்விளக்குகள், சிசிடிவி கேமராக்கள் விரைவில் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி கிரிவல வீதியில் உள்ள அனைத்து பஞ்சாமிர்த கடைகளையும் 5 மாதங்களில் அகற்றி விடுவோம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பழனி கிரி விதிகள் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டன.
Tags:    

Similar News