சாயப்பட்டறை உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டியவர் கைது !
சேலத்தில் சாயப்பட்டறை உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.
Update: 2024-05-02 06:14 GMT
சேலம் டவுன் குமரன் தெருவை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 40). இவர் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெற்று சாயப்பட்டறை நடத்தி வருகிறார். இதனிடையே தாதகாப்பட்டியை சேர்ந்த மணிமாறன் (43) என்பவர் சிவகுமாரை சந்தித்தார்.
அப்போது சாயக்கழிவுகளை சுத்திகரிக்காமல் வெளியேற்றுவது குறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்காமல் இருப்பதற்காக பல லட்ச ரூபாய் கேட்டு மிரட்டினார்.
இதுகுறித்து சிவகுமார் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மஞ்சுளா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மணிமாறனை கைது செய்தனர்.