மீன் வியாபாரியை  வெட்ட முயற்சித்தவர் கைது

நாகர்கோவில் அருகே மீன் வியாபாரியை அரிவாளால் வெட்ட முயற்சித்து கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-05-26 04:35 GMT

பைல் படம் 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பெருவிளை பகுதியை சேர்ந்தவர் ஆலன் (37). மீன் வியாபாரம் செய்து வருகிறார்.  இவருக்கும் மேலப்பெருவிளை பகுதியை  சேர்ந்த செல்வன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.   இந்த நிலையில் சம்பவ தினம் பெருவிளை பகுதியில் ஆலன் மீன் வியாபாரம் செய்து கொண்டிருந்த போது, அங்கு வந்த செல்வன் தகராறு செய்து அரிவாளால் ஆலனை வெட்ட முயற்சி செய்துள்ளார். அக்கம் பக்கத்தினர் அங்கு குவிந்த உடன், செல்வன் கொலை  மிரட்டல் விடுத்து விட்டு சென்றுள்ளார். இது குறித்து ஆலன் கொடுத்த புகாரின்  பேரில் செல்வத்தை ஆசாரிப்பள்ளம் போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News