புதிதாகக் கட்டப்பட்டுள்ள உணவு உண்ணும் கூடத்தினை திறந்து வைத்த அமைச்சர்!
புதிதாகக் கட்டப்பட்டுள்ள உணவு உண்ணும் கூடத்தினை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி அவர்கள் இன்று (14.03.2024) திறந்து வைத்தார்.
Update: 2024-03-14 12:10 GMT
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், வேகுப்பட்டி ஊராட்சியில், வேகுப்பட்டி ஏனமாரியம்மன் கோவில் அருகில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள உணவு உண்ணும் கூடத்தினை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி அவர்கள் இன்று (14.03.2024) திறந்து வைத்தார். உடன் பொன்னமராவதி ஒன்றியக்குழுத் தலைவர் சுதா அடைக்கலமணி, பொன்னமராவதி பேரூராட்சித் தலைவர் சுந்தரி அழகப்பன், பொன்னமராவதி வட்டாட்சியர் எம்.சாந்தா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.