பல்லடம் ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைச்சர் திறந்து வைத்தார்

பல்லடம் நகராட்சியில் அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்து வைத்தார்.

Update: 2024-03-16 07:33 GMT

பல்லடம் நகராட்சியில் அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்து வைத்தார்.


திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சி மேற்கு பல்லடத்தில் 14 -வது வார்டு கொசவம்பாளையம் சாலையில் தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் கட்டப்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன் திறந்து வைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து நல பெட்டகத்தை வழங்கினார். உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் மலர்விழி பல்லடம் நகர்மன்ற தலைவர் கவிதாமணி ராஜேந்திரன் ஆகியோர் உள்ளனர்.
Tags:    

Similar News