புதுகுளம் மேம்பாட்டு பணியினை அடிக்கல் நாட்டி துவங்கி வைத்து அமைச்சர்

புதுக்கோட்டையில் உள்ள புதுகுளம் மேம்பாட்டு பணியினை அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்தார்‌

Update: 2024-03-15 12:07 GMT

அடிக்கல் நாட்டப்பட்டது 

புதுக்கோட்டை நகராட்சி, புதுக்குளத்தில், ரூ.5 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டுப் பணிகளை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் இன்று (15.03.2024) அடிக்கல்நாட்டி துவக்கி வைத்தார். உடன் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா அவர்கள், முன்னாள் அரசு வழக்கறிஞர் திரு.கே.கே.செல்லபாண்டியன் அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.மா.செல்வி அவர்கள், நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், நகர்மன்றத் துணைத் தலைவர் எம்.லியாகத் அலி, நகராட்சி ஆணையர் (புதுக்கோட்டை/அறந்தாங்கி (பொ)) ஷியாமளா, நகர்மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.
Tags:    

Similar News