சர்ச் மற்றும் பள்ளி வளாகத்தை சேதப்படுத்திய மர்ம நபர்கள்
திண்டுக்கல் அருகே சர்ச் மற்றும் பள்ளி வளாகத்தை சேதப்படுத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தாலுகா காவல் நிலையத்தில் மனு.;
By : King 24x7 Angel
Update: 2024-02-20 09:19 GMT
சர்ச் மற்றும் பள்ளி வளாகத்தை சேதப்படுத்திய மர்ம நபர்கள்
திண்டுக்கல் அருகே பொன்னுமாந்துறை அருகே சர்ச் மற்றும் பள்ளி வளாகத்தை சேதப்படுத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தாலுகா காவல் நிலையத்தில் மனு அளித்தனர்.திண்டுக்கல்லை அடுத்த பொன்னுமாந்துறை அருகே உள்ள அசிசி நகர் பகுதியில் உள்ள கான்வென்டில் அருட் சகோதரிகளுக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை சேதப்படுத்தினர். மேலும் அருகில் சர்ச்சில் உள்ள வேளாங்கண்ணி மாதா சுரூபத்தின் முன்பு உள்ள கண்ணாடியை உடைத்தனர். மாணவர்கள் குடிப்பதற்காக உள்ள குடிநீர் குழாய் மற்றும் மழைநீர் வடிகால் குழாய் முதலியவற்றை சேதப்படுத்தினர் . சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அருட் சகோதரிகள் மற்றும் பொதுமக்கள் தாலுகா காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்