மதுராந்தகம் அருகே கூலி வேலை செய்த தாய், தந்தைக்கு கைமாறு செய்த மகன்

மதுராந்தகம் அருகே கூலி வேலை செய்த தாய், தந்தைக்கு கைமாறு செய்த மகனுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

Update: 2024-02-20 13:06 GMT
கூலி வேலை செய்த தாய் தந்தைக்கு கைமாறு செய்த மகன்

தமிழ்நாடு கல்வியில் மிகச்சிறந்த மாநிலமாக இந்திய அளவில் திகழ்ந்து வருகிறது. குறிப்பாக பள்ளி படிப்பை மேற்கொள்ளும் மாணவர்கள், மேல் படிப்பை தொடர்வதில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. தொடர்ந்து தமிழ்நாட்டில் சாதாரண அரசு பள்ளிகளில் படித்தும், படிப்பை மட்டுமே நம்பி முன்னேறிய பல ஆளுமைகள் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

இதனால் தொடர்ந்து தமிழ்நாட்டில் கல்வி மூலமாக சாதனை மேற்கொள்ளும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில்,செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த வெண்மாலகரம் கிராமத்தை சேர்ந்தவர் நாகப்பன். இவர் கூலி தொழில் செய்து வருகிறார்.நாகப்பனின் மனைவி மங்க வாரம் மகாத்மா காந்தியின் 100 நாள் வேலைத் திட்டத்தில் வேலை செய்து வருகின்றனர்.

இந்த தம்பதியருக்கு 5 மகன்கள் , 1 மகள் உள்ளனர். இவர்களின் ஐந்தாவது மகன் பிரகாஷ் . இவர் கடந்த 2014 - 19 ஆண்டு சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் பி ஏ பி எல் பட்டப் படிப்பினை படித்து முடித்தார். இதனைத் தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் நிலை தேர்வு எழுதி தேர்ச்சி அடைந்த நிலையில் மீண்டும் நவம்பர் மாதம் நடைபெற்ற, முதன்மைத் தேர்வு எழுதி தேர்ச்சி அடைந்தார் .இதனைத் தொடர்ந்து பிப்ரவரி மாதம் நடைபெற்ற நேர்காணலிலும் தேர்ச்சி அடைந்து சிவில் நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Tags:    

Similar News