அதிகாரியின் கார் தீயில் எரிந்து சேதம் !
ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் அதிகாரி காரில் பேட்டரி அதிக வெப்பத்தின் காரணமாக தீ பற்றி எரிந்து சேதம். போலீசார் விசாரணை;
By : King 24x7 Angel
Update: 2024-02-24 11:10 GMT
கார் தீயில் எரிந்து சேதம்
ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் உதவி செயற் பொறியாளராக இருப்பவர் சண்முகவடிவு . இவர் தனது அலுவலக காரில் மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்ற நிலையில் சிறிது நேரத்தில் காரில் இருந்து கரும் புகையுடன் தீ வந்ததையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர்.,தீவிபத்து குறித்து தீயணைப்பு துறையினர் விசாரணை நடத்தியதில் காரில் இருந்த பேட்டரி அதிக வெப்பத்தின் காரணமாக தீ விபத்து நிகழ்ந்திருக்கலாம் என தெரிய வந்தது. இருப்பினும் இந்த தீ விபத்து காரணம் குறித்து ஈரோடு நகர காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த தீ விபத்தில் கார் முன் பகுதி முழுவதும் சேதமடைந்தது.