அ.தி.மு.க சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா!

வேட்டவலத்தில் அ.தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

Update: 2024-04-30 07:47 GMT

வேட்டவலத்தில் அ.தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.


திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தில் அ.தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நகர செயலாளர் கே.செல்வமணி தலைமையில் நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி, மோர், குளிர்பானம் வழங்கினார். நிகழ்ச்சியில் ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் பெருமாள் நகர் கே.ராஜன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் டிஸ்கோ குணசேகரன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News