புதிய அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்த ஊராட்சி தலைவர் !

சத்தியமங்கலம் அருகே புதிய அங்கன்வாடி மையத்தை ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவரும் சக்தி ஒன்றிய செயலாளருமான கே.சி.பி இளங்கோ திறந்து வைத்தார்.

Update: 2024-07-17 06:53 GMT

அங்கன்வாடி 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம்  மாக்கிணாங்கோம்பை ஊராட்சி அரசூர் பகுதியில் புதிய அங்கன்வாடி மையம் திறத்தல் இன்று 15/7/2024 அரசூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடிமையத்தை நமது சத்தி ஊராட்சி ஒன்றிய குழு பெருந் தலைவரும் சத்தி தெற்கு ஒன்றிய செயலாளருமான கேசிபி இளங்கோ அவர்கள் திறந்து வைத்தார். இதில் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் ராஜம்மாள் மாக்கிணாங்கோம்பை ஊராட்சி அம்மு ஈஸ்வரன் இண்டியம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் முன்னாள் கவுன்சிலர் விஸ்வநாதன் சத்தி தெற்கு ஒன்றிய துணை செயலாளர் அசோகன் முன்னாள் துணைத் தலைவர்ஏ எஸ் சண்முகசுந்தரம் மற்றும் அம்மு பூபதி ஏ எம் சாமிநாதன் கே எம் சாமிநாதன்அரவிந்த் வேலுச்சாமி சரவணன் ஏ ஆர் முருகேசன் மற்றும் ஒப்பந்ததாரர் பூபதி மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News