கஞ்சா வைத்திருந்த நபர் கைது!

திருப்பூர் மாவட்டம் அவிநாசிபாளையத்தில் கஞ்சா வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-05-18 11:15 GMT

திருப்பூர் மாவட்டம் அவிநாசிபாளையத்தில் கஞ்சா வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.


அவிநாசிபாளையத்தில் கஞ்சா   வைத்திருந்த நபர்  கைது! திருப்பூர் மாவட்டம், அவிநாசி பாளையம்  காவல்  நிலைய எல்லைக்குட்பட்ட  பொள்ளிகாலிபாலையம் நால்ரோடு பகுதியில் கஞ்சா விற்பதாக  தனிப்பிரிவு காவலருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து உடனடியாக  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவுப்படி அவிநாசிபாளையம் காவல் ஆய்வாளர் மற்றும் போலீஸார் விரைந்து சென்று விசாரித்ததில்  காட்டன் மார்க்கெட்டை சேர்ந்த முருகேஷ் என்பவர் சுமார் 1 கிலோ 100 கிராம் எடையுள்ள கஞ்சாவை விற்பதற்காக வைத்திருந்ததால் அவரை கைது செய்து , வழக்கு பதிந்து, பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில்  அடைத்தனர்.
Tags:    

Similar News