பூனையை நாய்களிடம் வீசி கொன்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டவர் கைது !

பூனையை நாய்களிடம் வீசி கொன்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டவர் கைது பலத்த ரத்த காயம் அடைந்த பூனை பரிதாபமாக உயிரிழந்தது.

Update: 2024-04-02 12:30 GMT

கைது

திருச்சி மாவட்டம், ஜம்புநாதபுரம் காவல்நிலைய எல்லையில், பெருமாள் என்கிற விஜயகுமார் மேலத்தோட்டியபட்டி என்ற கிராமத்தில் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டு பக்கம் சுற்றித்திரிந்த பூனை ஒன்றை பிடித்து தனது வீட்டு நாய் மற்றும் பிற நாய்களிடம் தூக்கி வீசி உள்ளார். அந்த பூனையை நாய்கள் கடித்து குதறின. இதில் பலத்த ரத்த காயம் அடைந்த பூனை பரிதாபமாக உயிரிழந்தது. இதனை விஜயகுமார் தனது செல்போனில் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலானது. இதனை பார்த்த வளவந்தி மேற்கு கிராம வி.ஏ.ஓ., சபாபதி, ஜம்புநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விஜயகுமாரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி முசிறி கிளை சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News