வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் கைவரிசை !
வீட்டின் பூட்டை உடைத்து நகை,பணம் கொள்ளை- போலீசார் விசாரணை
Update: 2024-03-14 08:40 GMT
கோவை:பீளமேடு செங்காளியப்பா நகர் பகுதியை சேர்ந்தவர் மனோகர். இவர் இரும்புக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி சாந்தி உடல்நிலை பாதிக்கப்பட்டு, திருச்சியில் சிகிச்சை பெற்று வந்த போது உயிரிழந்துள்ளார்.கடந்த 15 நாட்களுக்கு மேலாக திருச்சியில் இருந்த நிலையில் கோவையில் வீடு பூட்டப்படு இருந்துள்ளது.இந்நிலையில் இன்று காலை மனோகரின் வீட்டின் பூட்டு உடைந்திருப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் கோவை பீளமேடு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் தடயவியல் நிபுணர்கள் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.இது தொடர்பாக திருச்சியில் இருந்த மனோகருக்கு போலிசார் தகவல் தெரிவித்துள்ளனர். அவர் அங்கிருந்து வந்தவுடன் வீட்டில் என்னென்ன பொருட்கள் திருடப்பட்டுள்ளது என்பது தெரியவரும்.போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் வீட்டில் இருந்த 20 சவரன் தங்க நகைகள் திருடப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். எனினும் மனோகரன் வந்த பின்னரே திருடு போன பொருட்களின் மதிப்பு தெரியவரும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.இந்த திருட்டு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.