வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் கைவரிசை!

ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்கள்.

Update: 2024-07-03 05:56 GMT

காவல்துறை விசாரணை


கோவை:ரத்தினபுரி மாதவன் மீதி பகுதியைச் சேர்ந்தவர் மீனா.சாய்பாபா காலனி பகுதியில் உள்ள ஐடி கம்பெனி ஒன்றில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார்.நேற்று பணிக்குச் சென்று விட்டு மதியம் வீடு திரும்பிய போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு உள்ளே சென்று பார்த்தபோது அலமாரியில் வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்று இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்ததார். இதுகுறித்து ரத்தினபுரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கைரேகை நிபுணர்களுடன் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் ஏற்கனவே குற்ற வழக்கில் ஈடுபட்ட நபர்களா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடியிருப்பு அதிகம் உள்ள பகுதியில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
Tags:    

Similar News