பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

வீட்டை விட்டு வெளியேறிய ஜோடி திருமணம் செய்து கொண்டு காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

Update: 2024-05-05 13:59 GMT

காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த ஜோடி

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த பிராமணமங்களம் பகுதியை சேர்ந்த சங்கர் மகள் ஜெயசக்தி (21) இவர் கல்லூரி முடித்து விட்டு வேலூரில் உள்ள தனியார் கார் ஷோரூமில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.

சென்னை ரெட்டில்ஸ் பகுதியை சேர்ந்த மைதீஸ்வரன் (25) இவர் தனியார் கால் டாக்ஸியில் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், மைதிஷ்வரன், ஜெயசக்தியும் கடந்த ஒரு வருட காலமாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் காதலுக்கு பெற்றோர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் கடந்த 2ம் தேதி அன்று காலை வழக்கம்போல் வேலைக்கு சென்ற ஜெயசக்தி மீண்டும் வீடு திரும்பவில்லை.

இதனையடுத்து அவரது பெற்றோர்கள் அவரை எங்கு தேடியும் கிடைக்காததால் பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் தான் காதலித்து வந்த மைதீஸ்வரனை நேற்று முன்தினம் சென்னை பரங்கிமலை பகுதியில் உள்ள ஒரு கோவில் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்கள் இருவரும் பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

Tags:    

Similar News