பாதுகாப்பு கேட்டுஆத்தூர் போலீசில் காதல் ஜோடி தஞ்சம் !
ஆத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.
Update: 2024-07-08 07:19 GMT
கெங்கவல்லி: வீரகனூர் அடுத்த புளியங்குறிச்சியைச் சேர்ந்த வர் செல்வம் மகள் கிரிஜா(19). இவர் பிளஸ் 2 முடித்து விட்டு, தலைவாசலில் உள்ள தனியார் கல்லூரியில் அலுவலக பணியாளராக பணியாற்றி வருகிறார். ஆத்தூர் வடக்கு உடையார்பாளையம், லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் பாபு மகன் தினேஷ்(23). பட்டப்படிப்பு படித்து விட்டு, ஓட்ட லில் சமையல் மாஸ்டராக பணியாற்றி வருகிறார். கடந்த ஓராண்டாக கிரிஜா, தினேஷ் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இது கிரிஜாவின் பெற்றோருக்கு தெரிந்ததால், வேறு மாப்பிள்ளை பார்த்துள்ளனர். இதனால் அதிர்ச்சிய டைந்த கிரிஜா, கடந்த 3ம்தேதி வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து கிரிஜா தாயார் சின்னபொண்ணு வீரகனூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்நிலையில் கிரிஜா, தினேஷ் இருவரும், நேற்று முன்தினம் உலிபுரம் கோயிலில் திருமணம் செய்துகொண்டு, நேற்று ஆத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். இன்ஸ்பெக்டர் மலர்கொடி, இருதரப்பு பெற்றோரை நேரில் அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். இதற்கு கிரிஜாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, அவர்களிடம் எழுதி வாங்கிக்கொண்டு, கிரிஜாவை கணவர் தினேசுடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.