சங்கரன்கோவிலில் இறைச்சி விற்பனை அமோகம்

தைப்பொங்கல் பண்டிகை முடிந்ததையடுத்து சங்கரன்கோவிலில் இறைச்சி விற்பனை அமோகமாக நடந்தது. ஆடு, கோழி, மீன் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது.

Update: 2024-01-17 08:42 GMT
இறைச்சி விற்பனை 
தைப்பொங்கல் பண்டிகை முடிந்ததை அடுத்து தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில்  இன்று இறைச்சி கடைகளில் அமோக விற்பனை நடைபெற்றது . இன்று ஆடு, கோழி விற்பனை களை கட்டியது. வெள்ளாடு இறைச்சி கிலோ 1000 ரூபாய்க்கு விற்பனை ஆனது. இன்றும் காலை முதல் பொதுமக்கள் ஆர்வமாக இறைச்சி வாங்கி சென்றனர். மீன் மற்றும் கோழி முட்டை வியாபாரமும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
Tags:    

Similar News