சமையலறையில் பதுங்கி இருந்த நல்ல பாம்பு !
சமையல் அறையில் புகுந்த நல்ல பாம்பு தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேரம் போராடி 6 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பை உயிருடன் மீட்டு, மறைமலை நகர் வனப்பகுதியில்விட்டுச் சென்றனர்.
Update: 2024-03-20 10:21 GMT
மறைமலை நகர் அடுத்த கீழக்கரணை குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் வசந்த், 40. நேற்று முன்தினம் இரவு, இவரது வீட்டின் சமையல் அறையில், நல்ல பாம்பு புகுந்தது. இதனை கண்ட வசந்த் மற்றும் குடும்ப உறுப்பினர்கள், அலறி யடித்து வீட்டை விட்டு வெளியே ஓடினர். இதுகுறித்து, வசந்த் மறைமலைநகர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேரம் போராடி, பாத்திரங்களுக்கு இடையே பதுங்கி இருந்த 6 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பை உயிருடன் மீட்டு, மறைமலை நகர் வனப்பகுதியில் விட்டுச் சென்றனர்.