கீழே கிடந்த மாத்திரையை சாப்பிட்ட மாணவர்; மருத்துவமனையில் அனுமதி

கீழே கிடந்த மாத்திரையை சாப்பிட்ட மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் திருப்புவனம் போலீசார் விசாரணை.

Update: 2023-12-01 13:29 GMT

கீழே கிடந்த மாத்திரையை சாப்பிட்ட மாணவர்; மருத்துவமனையில் அனுமதி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே சொக்கநாதிருப்பைச் சேர்ந்த மாணவர் அல்லிநகரம் அரசு பள்ளியில் படித்து வருகிறார். பள்ளி வளாகத்தில் கிடந்த காலாவதியான இரும்புச் சத்து மாத்திரையை விளையாட்டாக விழுங்கியுள்ளார். மதிய உணவிற்கு பின் வாந்தி எடுத்து மயங்கியுள்ளார். உடன் படிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள் திருப்புவனம் அரசு மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் திருப்புவனம் போலீசார் மாணவரிடம் விசாரித்து வருகின்றனர்
Tags:    

Similar News