தூய்மை பணியில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு உதவிய குழு

திருநெல்வேலி ஆனிதேரோட்ட விழாவில் குவிந்த குப்பைகளை அகற்றிய தூய்மை பணியாளர்களுக்கு முகநூல் நண்பர்கள் குழு உதவினர்.

Update: 2024-06-22 06:27 GMT

தூய்மை பணியில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு உதவிய குழு

நெல்லை மாநகர டவுன் நெல்லையப்பர் கோவிலில் நேற்று ஆனிதேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து இன்று (ஜூன் 22) தேரோட்டத்தில் குவிந்த குப்பைகளை மாநகராட்சி பணியாளர்கள் தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த மாநகராட்சி பணியாளருக்கு முகநூல் நண்பர்கள் குழு சார்பில் டீ, வடை உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News