சாட்சி சொல்ல வந்தவருக்கு கொலை மிரட்டல்..
விழுப்புரம் நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வந்தவருக்கு கொலை மிரட்டல் - போலீசார் விசாரணை;
By : King 24x7 Angel
Update: 2024-06-12 08:39 GMT
வழக்கு
விழுப்புரத்தை அடுத்த கப்பூரைச் சோ்ந்த முனியன் மகன் ராமன் (எ) ராஜன்(22). இவா் கடந்த 2023- ஆம் ஆண்டு காணை அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கு விழுப்புரம் எஸ்சி, எஸ்டி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.செவ்வாய்க்கிழமை இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணக்கு வந்தது.
அப்போது முனியன், மனைவி கஸ்தூரி, மகள் ரேவதி ஆகியோா் ஆஜராகி சாட்சியம் அளித்துவிட்டு வெளியே வந்தனா்.அப்போது, அங்கு வந்த வழக்கில் தொடா்புடைய விழுப்புரத்தைச் சோ்ந்த காா்த்திக் உள்ளிட்டோா் முனியன் மற்றும் அவரது குடும்பத்தை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம். இதுகுறித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா காவல் நிலையப் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.