நகை பறிக்க முயன்ற பெண்-தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைத்த பொதுமக்கள்

Update: 2024-01-05 10:49 GMT

பெண் மீது வழக்குப்பதிவு 

பொள்ளாச்சி:ஆழியார் மார்கெட் சாலை பகுதியை சேர்ந்தவர் சுப்பத்தாள். சம்பவத்தன்று வீட்டின் முன் படுத்து உறங்கி உள்ளார். அப்போது அங்கு வந்த பெண் ஒருவர் சுப்பாத்தாள் கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினை பறித்து கொண்டு தப்பிக்க முயன்ற நிலையில் சுப்பாத்தாள் சத்திமிட அருகில் இருந்தவர்கள் அந்த பெண்ணை கையும் களவுமாக பிடித்து தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர் கோவை கணபதி பகுதியை மயில்சாமி என்பவரின் மனைவி கவிதா என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து கவிதா மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News