ஏரி முனியப்பன் கோவிலில் திருட்டு !

குமாரபாளையம் அருகே ஏரி முனியப்பன் கோவிலில் நகை, பணம் திருட்டப்பட்டதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-07-09 12:16 GMT

நாமக்கல்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே கல்லங்காட்டுவலசு, நல்லாம்பாளையம் பகுதியில் பிரசித்தி பெற்ற ஏரி முனியப்பன் கோவில் உள்ளது. இதில் அப்பகுதியை சேர்ந்த அல்லிமுத்து, 35, என்பவர் தினமும் இரவு வேளையில் விளக்குகளை எரியவிட்டும், பகலில் விளக்குகளை அணைத்தும் வந்துள்ளார்.

இரவில் விளக்குகளை போட்டு சென்றவர், பகலில் விளக்குகள் அணைப்பதற்காக நேற்றுமுன்தினம் காலை 07:00 மணியளவில் வந்த போது, கோவிலில் கதவு திறந்திருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து ஊர்க்கவுண்டர் சிதம்பரம் வசம் சொல்லியதன் பேரில், சிதம்பரம் நேரில் வந்து பார்த்து, குமாரபாளையம் போலீசில் இது குறித்து புகார் மனு கொடுத்தார்.

கோவில் பீரோவில் உள்ள 3 அண்டா, ஒரு பவுன் தங்க நகை, உண்டியலில் உள்ள பணம், வர்த்தக காஸ் சிலிண்டர் ஆகியவை திருடப்பட்டதாக கூறப்படுகிறது. போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News